மீரிகம – வில்வத்தயில் ரயில் விபத்து!

மீரிகம வில்வத்தை ரயில் கடவையில் கனரக வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்து காரணமாக மலையக மற்றும் பிரதான மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து சில மணித்தியாலங்களாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மீரிகமவிலிருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த கனரக வாகனம் பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பௌஃபி கர்லயால ரயிலுடன் மோதியுள்ளது.

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அனைத்து ரயில்களும் இடையிடையே தரித்திருப்பதாகவும், இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது,

இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள்  மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply