ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.

டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது.

ஏறக்குறைய 12 ஆயிரம் பேர் வசிக்கும் லஹைனா பகுதியில், வணிகக் கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

இதனால் வானுயர கரும்புகை எழுந்தது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, கடலோர காவற்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளை அனுப்பியுள்ளனர்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியை தீயணைப்பு வீரர்கள்  துரிதப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply