விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் பிரான்ஸில்11 பேர் பலி!

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில் நேற்று (09.08.2023) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதிப் பகுதியே தீப்பற்றியுள்ளது.

மேலும் குறித்த தீ விபத்தில் இது வரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரை காணவில்லை எனவும் காணாமல் போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply