மீரிகம வில்வத்தை ரயில் விபத்து தொடர்பில் விசாரணை!

மீரிகம வில்வத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் அடங்கிய ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு மீரிகம பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதி, கனரக வாகனத்துக்கு இடையூறாக முன்னால் வந்த லொறியின் சாரதி, ரயில் கடவைக் காவலர் ஆகியோரிடம் இது தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், ரயில் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும், விபத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும், உரிய ஆவணங்கள் சட்டப் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply