பீடிகளால் அரசுக்கு வரி வருமானம் அதிகரிப்பு – கபீர் ஹாசிம்

பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்  ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பீடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார்.

அதன்போது அவர், இந்த நாட்டில் 23 சதவீதமான மக்கள் பீடி பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

கிராமப்புறங்களில் ஏறக்குறைய 4 இலட்சம் பேர் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, புதிய வரி விதிப்பினால் பீடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.

வரி விதிப்புடன் பீடிகள் மூலம் கிடைக்கும் வரி வருமானமும் வேகமாக அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply