மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

பாலமொன்றின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிலேயே இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களால் இன்று காலை பொலிஸாருசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பார் வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சடலம் குறித்து தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply