மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம்!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் புகையிரதம் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புகையிரத கடவை ஊடாக பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் 10.45 மணி வரை புகையிரதம் வீதியை மறித்து நின்றுள்ளது.

இதுகுறித்து மட்டக்களப்பு புகையிரத பொறுப்பதிகாரியை வினவ முற்பட்டபோதும் பயனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply