கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா 25000 ரூபா சரீரபிணையில் அவர்கள் விடுவிக்கபட்டுள்ளனர்.

மேலும் ,எதிர்வரும் 14 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று கிருலப்பனை மற்றும் விஹாரமஹா தேவி பூங்கா ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply