இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு – இளைஞனுக்குக் காயம்!

நீர்கொழும்பு, லெல்லமவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் 25 வயதுடைய ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபன பகுதியைச் சேர்ந்த குறித்த காயமடைந்த இளைஞர், மருத்துவ சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

குற்றவாளிகளை கைது செய்ய டங்கல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply