விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? பிக்குகள் கோசம்!

விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில், சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம். வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற இரா.சம்பந்தன், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply