அட்டாளைச்சேனையில் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, இம்முறை  முதன்முறையாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.எம்.ஜமால்டீன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

அதனை கௌரவிக்கும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பாராட்டு பத்திரம் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

( எம்.எப்.நவாஸ்)

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply