ஒன்பது வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! தொடரும் பொலிஸாரின் விசாரணைகள் !

வீடொன்றில் இருந்து சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த சலானி பீரிஸ் என்ற 9வயது மாணவி ஒருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று மாலை கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கருதி சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply