மட்டக்களப்பு பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்தரிப்பு கட்டிடத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர்  கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும் பஸ்தரிப்பிட கட்டிடங்களில்  தங்கி வாழ்ந்து வருதாகவும், இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply