பேருந்து – லொறி விபத்து : 7 பேருக்கு காயம்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதியில் புல்லர் சந்திக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்து ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்லை பகுதியில் இருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் ஏறக்குறைய 15 பேர் பயணித்துள்ளதுடன், இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து விளக்கு எரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply