இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழில் போராட்டம்!

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் மீது நம்பிக்கை இல்லை. பருத்தித் துறை பொலிசார் கஞ்சா கடத்தல் காரர்களுடன் தொடர்பு வைத்து சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதன் போது, இராணுவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, யாழ் மாவட்ட இராணுவ தளபதியே கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4வது சிங்க றெஜிமென்ட் படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply