நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது.

கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின் வீட்டிலேயே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் , பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply