வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ முடியும் என்றும், அதனை விடுத்து உரிமை கொண்டாடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

களனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply