அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வான் மற்றும் இரு லொறிகளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது, லொறியின் பின்பகுதியில் அமர்ந்து பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply