விரைவில் தலைமன்னார் – கொழும்பிற்கு இடையில் கடுகதி ரயில் சேவை!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புதிய அதிவேக ரயில் சேவை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் – மடு தேவாலய அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply