பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயார் – விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதை எவராலும் தடுக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply