தென்னிலங்கையில் வர்த்தகர் மாயம்!

கொலன்ன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று குறித்த வர்த்தகர் பணம் எடுத்து வருவதற்காக தனது வானில் தெனியாய நகருக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் வீடு திரும்பாததால் வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் அனில்கந்த பொது மயானத்திற்கு அருகில் பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காணாமல் போன வர்த்தகரைக் கண்டுபிடிப்பதற்காக கொலன்ன பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply