நெடுந்தீவில் இளைஞன் மாயம்!

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி மதியம் வீட்டிலிருந்து சென்றவேளையிலேயே காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதேவேளை நெடுந்தீவு 14 ஆம் வட்டாரத்தில் அன்றைய தினம் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது.

குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கடற்படை ஏனைய பொலிஸ் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply