பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் நடத்துவதை புலம்பெயர் தமிழர் உடனடியாக நிறுத்த வேண்டும்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களைத் தான் நேரில் சந்தித்ததாகவும் வெளிநாட்டில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளியொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என ஒரு குழுவினரும், பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருக்கின்றனர் என இன்னொரு குழுவினரும் தமது சுயலாப அரசியலுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்களின் சுயலாப அரசியலுக்காக உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply