ரணில் பஸில் இடையே இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோரிக்கைக்கு அமைய நடைபெறும் இந்த சந்திப்பில், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply