சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய்மொழி பரீட்சை யாழில்!

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோருக்கான சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சார்த்திகள், தமது பிரதேச செயலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரிடம் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் எழுதும் மற்றும் வாசிக்கும்  திறன் குறைந்தவர்  என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் சமர்பித்து,  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு குறித்த திகதிகளில் வாய் மொழி பரீட்சையில் தோற்ற முடியும் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply