தனியார் காணி மற்றும் பங்களாவை பலவந்தமாக கைப்பற்றிய பிக்கு!

மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணி மற்றும் அதில் உள்ள பங்களாவுக்குள் பலவந்தமாக நுழைந்து, அவற்றை கைப்பற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேச விகாராதிபதியான பிக்கு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பள்ளேகொட்டுவ ஸ்ரீ விஜயசுந்தரராம விகாராதிபதி மாவதகம தம்மரதன தேரர் உட்பட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணி மற்றும் பங்களா உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பங்களாவை பௌத்த சாசன திட்டத்திற்கு வழங்குமாறு கைது செய்யப்பட்டுள்ள பிக்கு, அண்மையில் காணி மறுசீரமைப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் 419 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த காணி, காணி மறுசீரமைப்பு அதிகார சபைக்கு சொந்தமானது அல்ல என அதிகார சபை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply