திடீரென இடிந்து வீழ்ந்த கடற்படை முகாம் பாலம் – திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply