நாளை இடம்பெறவுள்ள நல்லைக்குமரன் மலர் வெளியீட்டுவிழா!

நல்லூர் கந்தன் பெருவிழாவினை முன்னிட்டு யாழ்பாணம் மாநகரசபையின் சைவசமய விவகார குழுவினால் வெளியிடப்படும் நல்லைக்குமரன் நூல்வெளியீட்டு விழா இம்மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9மணியளவில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த விழாவில் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றியதோடல்லாமல் சமூகத்திற்கும் பலவிதத்தில் பணியாற்றிய பெருந்தகை ஒருவரை இனங்கண்டு கௌரவித்து யாழ்விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன் இவ்வருடம் சைவத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் பெரும் பணியாற்றியதுடன் நில்லாது பல சமூகப்பணிகளையும் மேற்கொள்ளும் சிவஸ்ரீ தாணுநாதக் குருக்கள் மஹாதேவக் குருக்கள் அவர்களுக்கு குறித்த விருதினை வழங்கி கௌரவிப்பதற்கு சைவசமய விவகாரக் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிகழ்வில் சைவசமய விவகார குழுவின் தலைவரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த. ஜெயசீலன் தலைமை தாங்குவதுடன் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரான இ.இலங்கோவனும், சிறப்பு விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி செ.சுதர்சன் என்போரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply