இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் – அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம்!

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் தீவிரமாக தேடிப்பார்க்குமாறும் முறையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்தின் போது சமிந்த விஜேசிறி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் குண்டுதாரிகள் நாட்டில் இருப்பதாகவும் அதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாார்.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவங்களினால் நாட்டில் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னரே தங்களுக்கு கிடைத்த தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதும், அதுதொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்காமை அல்லது தேடிப்பார்க்காமையின் காரணமாக கிறிஸ்தவ மக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்திருந்தனர் என அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்- செயிக் எம்.அர்கம் நுராமினினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply