அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை – யாழில் சம்பவம்!

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அருட்தந்தையின்  30,000 ரூபாய் பணமும், தேவாலய உண்டியலில் இருந்த 15,000 ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply