வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த  புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி  திறக்கப்பட்டு  நவம்பர் 7ஆம் திகதி  முடிவடையும் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டம் எந்த இங்கிலாந்து பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு  முதுநிலைகல்வியையும் கற்க  முழு நிதி உதவித்தொகையை வழங்குகிறது.

இந்த புலமைப்பரிசிலுக்குள் விமானங்கள், தங்குமிடம் மற்றும் பாடநெறிக் கட்டணங்கள் அனைத்தும் அடங்கும், முழு நிதியுதவி வழங்கப்படுவதால்  உங்கள் தொழில் இலக்குகளை அடைவதிலும், வாழ்நாள் அனுபவங்களை அதிகப்படுத்துவதிலும் நீங்கள் சுதந்திரமாக கவனம் செலுத்தலாம் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply