வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பசறை  13ம் கட்டை லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதே பகுதியைச் சேரந்த 71 வயதான ஒருவரே உயிரிழந்ததுடன், அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பதுளை நீதவானின் களப்பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply