கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர்!

தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த  குற்றச்சாட்டில்  வர்த்தகர் ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால்   கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை மாபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான வர்த்தகர் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை 3.45 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானத்தில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் கொண்டு வந்திருந்த  பயணப் பைகளை சோதனையிட்டபோதே 14 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க அதிகாரிகளால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 31 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply