சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து இன்று மன்னாரில் பாரிய போராட்டம் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply