பாதுகாப்பற்ற பாதையில்சென்ற புகையிரதம் ஒன்று வானுடன் மோதி விபத்து!

வாதுவ, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று அப்பகுதியில் வந்த வானுடன் மோதியதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வானில் பயணித்த ஒருவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் உள்ளே சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள் சிக்கியுள்ள நபரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த மெதுவான புகையிரதம் இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த வானுடன் மோதியதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்து காரணமாக அப்பகுதியின் கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply