தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் எதனால் தீப்பிடித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், மேலும் உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply