அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும்  பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழரசுக் கட்சியும், தானும் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு முக்கிய விடையம், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு அதனோடு சம்பந்தப்படவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்தித் தளமான Channel 4வினால் வெளியிடப்பட்டுள்ள காணொளிக்கு அமைவாக அனைத்து விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் தான் இதே பதிலை அளித்துள்ளதாகவும் மீண்டும் இந்த தகவலை தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அரசு பாராமுகமாக இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply