வெளியானது சனல் 4 ஆவணப்படம் – பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசியங்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4வினால் ஆவண படம் ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ் என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணி அளவில் ஒளிபரப்பட்டது.

இதில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பில் ஹன்சீர் அஷாட் மௌலானா தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெயர் வெளிப்படுத்தப்படாத முன்னாள் அரச அதிகாரி ஒருவரும் இதில் தகவல் வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் குறித்த ஆவணப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தம்மால் முன்வைக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மை எனவும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேவுக்கும், ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த தாக்குதல் தாரிகளுக்கும் இடையில், ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக, தான் 2018 இல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தை அடுத்து, சுரேஷ் சாலே, ராஜபக்சக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் 6 மாதங்களில் தாம் நாட்டை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்ததாக அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல எனவும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply