முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான இளைஞர்கள்!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்தில் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,  ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply