ஊடக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த ஊடக மாநாடு 07.09.2023 நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் நியாயமற்ற வரி விதிப்பு மற்றும் ஊழியர் சேமலாப நிதியை தவறாக நிர்வகித்தலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பான கருத்து வெளிப்பாட்டையும் எதிர்கால நடவடிக்கைகளையும் நோக்காகக் கொண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

எனவே குறித்த ஊடக மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply