ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தான் தீர்மானித்தது அல்ல எனவும் மொட்டு கட்சி ஆட்சியில் இருந்த போது அந்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவி வேண்டாம் என மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது தான் நாட்டைப் பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply