கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாயின

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் ஆகியோர் களப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டதற்கமைய இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றன.

  குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் காவல் நிலையப் பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் காவல் அதிகாரி, விசேட அதிரடிப் படையினர் முன்னிலையில் நடைபெற்றது.

நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசு கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினர் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தைத் தோண்டியபோது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (க)

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply