ராஜபக்ஷக்களின் பாரம்பரியத்தில் சேறு பூசும் செயற்பாடே சனல் 4 ஆவணப்படம்!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளி தொடர்பில்  கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையிலலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சனல் 4 காணொளி 2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்யானவை என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply