சரணடைந்தவர்களே கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டுள்ளனர்!

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாங்கள் அவதானித்த வகையில் பெண்ணினுடைய உடலங்கள் உறுதிப்படுத்த கூடியதாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு துளைத்திருப்பதனையும் காணக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இனிப்பு சுற்றி வரும் கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் தாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தான் கூறியது போல் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளை கொண்டுவந்து கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து சரணடைந்த பிள்ளைகளை இவ்வாறு புதைத்திருக்கிறார்கள் என்பது தான் அறிந்த வகையில் காணக்கூடியதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply