கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடயப் பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply