கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியிலேயே  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதன்படி, காலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கும் போதும், மதிய உணவு நேரம் மற்றும் மாலை பணிகள் நிறைவடையும் போதுமே ஊடகவியலாளர்கள் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அருகில் சென்று காணொளி அல்லது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply