இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது – திகாம்பரம் கண்டனம்!

இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்த பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின்கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் ஒரு குடியிப்பாளரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது மிலேச்சத்தனமானது. இது பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகார போக்கினையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற சம்பவம் அண்மையில் மாத்தளை ரத்வத்த தோட்டத்தில் நடந்திருந்த  நிலையில், மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது அரச கட்டுபாட்டுக்குள் பெருந்தோட்ட கம்பனிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

200 வருடங்கள் அல்ல 300 வருடங்களானாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட போவதில்லை எனவும் அவர்களின் கடும்போக்கும் மாறப்போவதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் இவாறான சம்பவங்கள் இடம்பெறும் போது வேடிக்கையாளர்களாக இருக்கின்றதே தவிர உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தளை ரத்வத்தை சம்பவத்திற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறு இடம்பெற்றிருக்காது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடந்தும் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply