தாயக விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!

தமிழரின் உரிமைக்காகவும் தாயக விடுதலைக்காகவும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று, யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஆரம்பமானது.
இந்த நினைவேந்தலின் ஆரம்ப நாளான இன்று முன்னாள் போராளியான விடுதலை என்பவரால் 9.45 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் சமநேரத்தில் நல்லூரில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply