பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம்!

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு அருகில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10.45 அளவில் குறித்த துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வானில் வந்த சிலர் அவர் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், சிசிரிவி காணொளிகள் ஊடாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக உத்திக பிரேமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

அவர் தற்போது நாடாளுமன்றில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply