குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவி அங்கி அணிந்த பிக்கு ஒருவர் எஹெதுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின்படி, போகஸ்வெவ ரஜமஹா விகாரையின் பிக்கு என நம்பப்படும் சந்தேக நபர், கோவிலில் தங்கியிருந்த சிறுவனை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த விடயத்தை எஹெடுவெவ பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply